26 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விளையாட்டு
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.
5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.