31 ஜூலை 2017- நடப்பு நிகழ்வுகள்

 

தமிழகம்


1.மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக 2014-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்துக்கும்,2015-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் த.பொ.ராஜேஷ் மற்றும் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியத்துக்கும்,2016-ம் ஆண்டு மாநில விருது சிவகங்கை மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழிக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்துள்ளார்




உலகம்


1.பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரியாக இருக்கும் “ஷாகித் கஹான் அப்பாஸி” நியமனம் செய்யப்ட்டுள்ளார்.
2.உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசில் முதல் இடத்தையும்,ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.