29 ஜூலை 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்தியா
1.இந்தியாவில் முதல் மாநிலமாக, மகாராஷ்டிரா அரசு சமூக புறக்கணிப்பு ( முன்னெச்சரிக்கை , தடை & நிவாரணம் ) சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2.வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்; பாட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.மத்திய விளையாட்டு துறையால் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான குழு ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா, குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்ட 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.